Posts

ஆயிரத்தோரு மின்மினிகள் - சிறுகதை.

Image
  "முற்றும்" எனத் தொடங்கும் அக்கதையை தஞ்சாவூர் ஓவியங்கள் வார்க்கப்பட்ட பச்சைவண்ண சன்னல் திரைச்சீலையின் அருகில் அமர்ந்து பிரபு கூற ஆரம்பித்த அந்நாளில்  சுபாஷினிக்கு புதிதாய் பால் பரு ஒன்று முளைத்திருந்தது. அதனோடு அவளது சுடுமண் நிற நெற்றியில் சிறு செந்தூரக் கீறல். அதே வண்ணத்தின் அடர்த்தியில் பருத்தியில் நெய்த சுடிதார். சித்திரச் சுரூபமாய் பார்த்துக்கொண்டிருந்தவளிடமிருந்து இடையிடையே "ம்ம்ம்" "ஆயிரம் இம்மிட்ட அதிரூப சுந்தரியே"  பிரபு கதையிலிருந்து சற்று வெளியேறி நகைத்தான்.  இம்முறை அவளிடம் ம்ம்முடன் சேர்த்து சிறு தலையசைப்பு.  முற்றும் எனத் தொடங்கும் அக்கதையை சாளரத்தை உரசி நின்ற பிறை நிலாவைப் பார்த்தபடி பிரபு கூற ஆரம்பித்தபோது சுவரை ஒட்டி அமர்ந்திருந்த சுபாஷினியின் மலர்க் குழலை நோக்கி மின்மினிப்பூச்சியொன்று தயங்கியபடி ஊர்ந்தது. அந்த மின்மினிப்பூச்சி  ஒருமுறை தனக்கு ஆயிரத்தோரு மின்மினிகள் வேண்டுமென அவர்களது மகள் பூங்கோதை அடம்பிடித்துக் கேட்டதன்பேரில், அவன் ஆறு மாதங்கள் வனவாசம் சென்று பிடித்து வந்தவையுள் கடைசி மிச்சம். மற்ற ஆயிரத்தையும் அவன் வீட்டிற்குள் கொண்டு வ

செவலை- சிறுகதை

Image
                        1 அருகு கூட முளைத்திடாத இறுகிய வரப்பின் மீது நகர்ந்த சாரையின் தோலில், காய்ந்த வயலில் ஊர்ந்த சாணி வண்டுகளின் கரங்களில், கறுமையேறி வெம்பி வீழ்ந்த நுணாப் பழத்தின் சதைப்பற்றில், கூடி வந்த இரவில்,கோபியின் பாத வெடிப்புகளில் நுழைந்துத் தங்கியிருந்த வண்டல் மண் துகளில், எதில் தான் மீதமில்லை? அன்றைய பகலின் கருணையற்ற உஷ்ணம். தாடிமயிர் கழுத்துவரை படர்ந்து, குடல் உருவும் பிச்சுவாக் கத்தியைப் போல் நீண்ட வளைந்தக் கொம்புகளையுடைய அந்த செவலைக் கிடா தொலைவில் தெரிந்தப் பட்ட மரம் ஒன்றை நோக்குவது போல் படுத்திருந்தது. அதன் பார்வையில் ஒளி குன்றியிருந்து. அதனுடைய வயிறு ஏறி ஏறி இறங்கிக்கொண்டிருப்பதைப் பார்த்தபடி கோபி நீண்ட நேரமாக அங்கு நின்றிருந்தான். ஆட்டின் காதின் மீது வந்தமர்ந்த பூச்சி ஒன்றினை கையில் வைத்திருந்தத் தொரட்டிக் கம்பினால் தட்டிவிட்டான். அந்த செவ்வாட்டின் முகம் இப்போதெல்லாம் அவனுக்கு வயது முதிர்ந்த மனிதன் ஒருவனின் முகத்தை நினைவூட்டுகிறது. பெருசு என்று தான் அதை அவன் அழைக்கிறான். திருவாடானை இடையன் வயலில் இருக்கின்ற சுப்பிரமணியனுக்குச்  சொ

கூந்தல் பனை-சிறுகதை

Image
                                                                    1 தாத்தா இறந்துவிட்டார் என்று செய்தி வந்திருந்தது. நான் தங்கியிருந்த அறையின் உரிமையாளர் வீட்டில் இருக்கும் லேன்ட் லைனிற்கு அழைத்து அப்பா தகவல் சொல்லியிருந்தார். கையில் இருந்த புத்தகத்தை மேசை மீது வைத்துவிட்டு என்ன செய்யலாம் என்று யோசித்தேன். போய்த்தான் ஆகவேண்டும். விடியும் வரை ஏன் காக்கவேண்டுமென அரைமணி நேரத்தில் கோயம்பேடு பேருந்து நிலையம் வந்துவிட்டேன். பேருந்து கிளம்பியபோது மணி இரண்டு. எனது தாத்தாவின் பெயர் மு.வெங்கடாசலம். இல்லை மு.வெங்கடாசலம் சேண்டபிரியர் Ex ஐ.என்.ஏ. அப்படித்தான் அவர் தனது அடையாளத்தை இறுதிவரை சுமந்தார். இரண்டு மூன்று மாதங்களாக மனிதருக்கு நடமாட்டமே இல்லை. அதற்காக ஒரேடியாக படுக்கையிலும் வீழ்ந்துவிடவில்லை. உயிரும் கூட உறக்கத்திலயே தான் பிரிந்திருக்கிறது. நல்ல சாவு. பேருந்து தாம்பரத்தில் நின்று கூடுதலாக சில பயணிகளை ஏற்றிக்கொண்டிருந்தது. மெட்ராஸிற்கு இனி வரவேக்கூடாது என்கிற அயற்சியை வெளிப்படுத்தும் முகத்துடன் ஒரு முதியவர், பின்னிரவு நேரத்திலும் சட்டையை இன